Tuesday 13 September 2016

தோரண வார்த்தைகள்

காகித வெண் சுவர்களில்
பதிந்திருக்கும்
முற்றுப் புள்ளி ஆணிகளில்
கட்டிவிடப்பட்ட
கவிதை வரிக் கொடியில்
கண்ணீரில் நனைந்து
கனத்துத் தொங்கிய வார்த்தைகள்
உன் நினைவுக் காற்றில்
அலைந்து ஆடிக் காய்ந்ததில்
உலர்ந்து லேசாகிப் போனது
என் மனம்


நாளைய குர்பானியில்
உயிர் போகப்போவதறியாமல்
நேற்றே ஹோலி கொண்டாடி
விட்டு வந்தன கலர் கலராய் ஆடுகள்
ஆந்திராவிலிருந்து.
















கண்ணாடிக் கோப்பை
நீரில் இட்ட
பனிக்கட்டி கரைந்து
கோப்பையின் நீரைக்
குளிர்வித்து காணாமல்
போவது போல் உன் நினைவை
இட்டதும் மனதில் குளுமை தந்து
காணாமல் போகிறாய்
என் மேனிதான் வியர்த்துப் போகிறது
கோப்பையின் மேற்புறமாக.


No comments:

Post a Comment