Friday 18 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (10)

(91)
"அண்ணே, ஒரு சந்தேகம்ணே"
"சீக்கிரம் கேட்டுத் தொலைடா"
"ஒரு நாட்டில கடன் வாங்கிட்டு திருப்பிக் கட்டாமல் வேற நாட்டுக்கு ஓடிப் போயிட்டா அவிங்க கடனை வராக் கடனா தள்ளுபடி பண்ணிடறாய்ங்க. உலக வங்கியில் கடன் வாங்கிட்டு கட்டாமல் எங்கேண்ணே போகணும்"?



(92)
"அந்த ஆளுக்கு அடிக்கடி நிறைய கடன் கொடுத்தீங்க . இப்ப வாங்கிய கடனை கட்டாமல் ஓடிப் போயிட்டான். இப்படி கடன் வாங்கும் போது செக்யூரிட்டி பார்த்தீர்களா"?
"ஆமாம் சார். ஒவ்வொரு தடவை கடன் வாங்க வரும் போதும் அவரு கூட யூனிபார்ம் போட்ட 10 செக்யூரிட்டிகளை கூட்டிக்கிட்டு வருவார், நாங்க பார்த்திருக்கோம் சார்".



(93)
"அண்ணே, கல்யாணத்திற்கு இரண்டரை இலட்சம் பணம் தராங்களாம்".
"அதுக்கென்னடா இப்போ?
"ஒரே நேரத்தில் ஒரே மேடையில் நம்ம கட்சித் தொண்டர்கள் 1000 ஜோடிகளுக்கு நீங்க தலைமை தாங்கி மெகா திருமணம் பண்ணி வச்சு ரொம்ப நாளாச்சே, அதான் நெனப்பூட்னேன்ணே".



(94)
"அடுத்த சென்மத்தில நாம எல்லாம் பாக்டீரியா, வைரஸ் இப்படித்தான் பொறக்கப் போறோம்ணே".
"அதெப்படிடா பெரிய தீர்க்கதரிசியாட்டும் சொல்லற"?
"அதுன்ணே ஒருத்தருட்ட கடன்பட்டா இல்லாட்டா கடன் கொடுத்து ஏமாந்தா அடுத்த பிறவியில பிள்ளையா பொறந்து கடன கழிக்கணுமின்னு கேள்விப்பட்டேண்ணே. 63 பேருக்கு இத்தனை கோடி ஜனங்க பிள்ளையா பொறக்க இது தவிர வேற வழியில்லையேண்ணே".



(95)
"என்னப்பா உங்க வீட்டு கிட்ட இரவில் திருட்டு நடக்குது பயமாக இருக்கும் என்று சொன்னாயே. இப்ப எப்படி இருக்கு"?
"போன மாசம் ஒரு ATM திறந்தாங்க இப்போ 10 நாளா இரவும், பகலும் 24 மணி நேரமும் எப்படியும் 50 பேர் நிற்கிறாப்டி, பயமே இல்லை".








(96)
"ஏணுங்க அந்த ATM ல் பணமே வரவில்லையே. அப்புறம் எதுக்கு அதுகிட்ட ஒருத்தரு ATM அப்படின்னு போர்ட் போட்டுக்கிட்டு உட்கார்ந்து இருக்காரு"?
அவரு 'ஆறுதல் டெல்லிங் மேன்'னாம். பணம் எடுக்க வரவங்களுக்கு ஆறுதலா தோளில் தட்டிக் கொடுத்து அனுப்புவாராம்".



(97)
" ஏணுங்க அந்த பேங்க்கில் ஒரு கவுண்டரில் கிளார்க்கும் இன்னொரு கவுண்டரில் ஒரு வஸ்தாத் பயில்வானும் உட்கார்ந்து இருக்காங்களே ஏன்"?
"கிளாரக் 'வாடிக்கையாளர் சேவை'க்கும், பயில்வான் பிரச்சனை பண்ணும் 'அடாவடிக்கையாளர் சேவை'க்கும் அப்படின்னு பிரிச்சிட்டாங்களாம்"



(98)
"வாடிக்கையாளர் சேவை மையத்தில் 500 ரூபாய் பணம் மாற்றப் போன என்னை நல்லா ஏமாத்திட்டாய்ங்க அண்ணே".
"என்னடா உன்னையா ஏமாத்திட்டாய்ங்க? எப்படி டா".
"உள்ளே போனா விதவிதமா இடியாப்பம் சேவை விற்பனையாம்.லெமன் சேவை மாதிரி 20 வகை சேவை 500 ரூபாய் ன்னு பாரசல் பண்ணி தலையில கட்டிட்டாய்ஙகண்ணே ".



(99)
"அண்ணே கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வர சூப்பர் ஐடியா எல்லாம் வைச்சிருந்தேன். ஆனா யாரும் என்னை மதிக்கலை. இப்ப கஷ்டப்படறாங்க".
"இவரு பெரிய பொருளாதார வல்லுநர், பிளான் சொல்லப் போறாரு. சரி சொல்லு"
"அது ஒன்னும் இல்லண்ணே. 50000 ரூபாய் நோட்டுங்க அடிச்சி எவ்வளவு வேண்டுமின்னாலும் 500,1000 ரூ நோட்டு கொடுத்து மாற்றிக்கலாம் என்று சொல்லி இருந்தா, சைலன்டா மாற்ற வர ஆளுங்க மாத்தின பின்னால் 2 மாதம் கழித்து அந்த 50000 ரூபாய் நோட்டெல்லாம் செல்லாதுன்னு சொல்லிட்டிருக்கலாம்ணே".


(100)
"அண்ணே நாளைக்கு மூத்த குடிமக்கள் மட்டுமே பணம் மாற்ற முடியுமாம்.
"அதுக்கு இப்ப என்னடா. அத்த எதுக்கு என்கிட்ட சொல்ற"?
"நாளைக்கு பணம் மாத்த கொள்ள நம்ம கட்சியின் 
இளைஞர் அணிச் செயலாளர்களா பொறுப்பில்  இருக்கிற வட்ட, நகர, பேரூர், ஒன்றிய, மாவட்ட, மாநில   பெரிசுங்க யாரும் கண்டிப்பாக பேங்க் பக்கம் போகாம இருக்கிறது மாதிரி பாத்துக்கிடுங்க".
Like
Comment


Wednesday 16 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (9)

(81)
"அண்ணே நீங்க சொன்ன மாதிரி வருமான வரிக் கணக்கை தாக்கல் பண்ண முடியாதாம். தப்பா இருக்காம்ணே. ஆடிட்டரு போன் பண்ணிச் சொன்னாரு".
"அப்படியா, என்ன பிரச்சனையாம்? கேட்டியா".
"அதான்ணே சின்னக்காவிற்குக் கொடுத்ததை எல்லாம் செகண்ட் ஹவுஸிங் இன்ட்ரெஸ்ட்டா காட்டக் கூடாதாம்ணே".



(82)
"நீங்க ஆபீசருக்கு மாமூல் கொடுத்துட்டீங்கதான் ஒத்துக்கிறேன். அதுக்காக அவர் விரலில் அழியாத அடையாள மை வைப்பேன் என்கிறதை எல்லாம் ஏத்துக்க முடியாது சார்".



(83)
"அந்த ஆலமரத்தடி இட்லிக் கடை ஆயாவை 200 ரூபாய் தரோமின்னு கூலி பேசி வரிசையில் நிக்க வைச்சு பணம் வாங்க கஷ்டப்பட்ட மாதிரி பேசச் சொல்லி பேட்டி எடுத்தமே, அத நம்ம கட்சி டீவியில் போட வேண்டாமாம், தலைவர் சொல்லிட்டாராம்".
"ஏணுங்கண்ணே, எதனாலயாம்ணே"?
"அந்தக் கிழவி 400 ரூபாய் வாங்கிக்கிட்டு எளிதாக இன்னிக்கே மூணு தபா பணம் வாங்கிட்டதா எதிரிக் கட்சி டீவிக்கும் பேட்டி கொடுத்ததாம்".



(84)
"என்னடா முனியா, ஊருல்ல உள்ள எல்லா பேங்கிலும் கடன் வாங்கிட்டு ஓடிப் போயிடலாம் அப்படின்னு எப்படி அவ்ளோ தைரியமாய்ச் சொல்கிறாய்"?
"நம்ம ஊருத் தலைவர் அதை எல்லாம் பேங்க் ஆளுங்க கிட்ட சொல்லி வராக்கடனா தள்ளுபடி பண்ணிடலாம் கவலைப் படாதே, எத்தினி கோடியானாலும் நான் பார்த்துக்கிறேன் என்று உறுதி சொல்லிட்டாரு".


(85)
"நம்ம ஆயாவை வரிசையில நிக்க வைத்து பேர் வாங்கறது நமக்கு செட் ஆவாதுன்னு சொன்னா நீங்க கேட்கவில்லை".
"ஏண்டா, செய்தி பேப்பரில் மொத பக்கத்தில் வரலையா"?
"கொட்டை எழுத்தில மொத பக்கத்தில் எல்லா பத்திரிக்கைகளிலும், 'கருப்புப் பணத்தை மாற்ற வயதான தாயை கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்து கொடுமை' அப்படின்னிட்டு போட்டிருக்காய்ங்கண்ணே".








(86)
"மேனேஜர் சார் எனக்கு உங்க பேங்கில் கடன் தர வேண்டும்".
"சார், நீங்க ஏற்கெனவே கடன் வாங்கி கட்டாமல் பாக்கி வைச்சிருக்கீங்க. ஏன் கட்டவில்லை"?
"அடுத்த வாரம் கட்ட நினைத்திருந்தேன். அதுக்குள்ள பணம் செல்லாதுன்னு ஆயிடுச்சா. செல்லாத பணத்தை கொடுத்தால் தாயா புள்ளையா பழகின உங்களை ஏமாற்றின மாதிரி இல்லையா. அதுதான் கட்டவில்லை சார்".



(87)
"அண்ணே கருப்புப் பணத்தை அடியோடு சிம்பிளா ஒழிச்சிடலாம்ணே"
"டேய், என்னடா புதுசா கரடி விடறயா"?
"ஆமாண்ணே. பனாமா, சுவிட்சர்லாந்து நாடுகளோட அதிபர்கள் கிட்ட பேசி அவிங்க நாட்டு நோட்ட மதிப்பிழக்க வைச்சிட்டா பிரச்சனை தீரந்திடுமேண்ணே".



(88)
"சார் நான் டிஸ்டிலெரி ஆரம்பித்து ஜின் வகை மது தயாரிக்கப் போறேன். கடன் கிடைக்குமா சார்"?
"கிடைக்கும்,ஆனா அதற்கு மார்ஜின் காட்ட வேண்டும்".
"அவ்வளவு தானே சார். அந்த 'குயின் ஸ்பேரோ' கம்பெனி மாதிரி காலண்டரில் தாராளமாக மார் ஜின் விளம்பரத்தில் காட்டிடறேன்".



(89)
"சார் அந்த பாரோயர்(Borrower) பயங்கர விவரமா இருக்காரு".
"அப்படியா, எஹை வைத்து அப்படிச் சொல்லறீங்க"?
"பின்ன என்ன சார் லோனுக்கு விண்ணப்பம் பண்ணும் போதே வாராக் கடன் புக்கில வரவு வைச்சிடுங்க. எதுக்கு இரட்டை வேலை. உங்க வேலைப்பளு குறையும் என்கிறார் சார்".


(90)"உங்க பாங்க்கில் கடன் வாங்க நிறையப் பேர் இரண்டு வரிசையாக பிரிந்து நிற்கிறாங்களே. ஏன் இரண்டு வரிசை சார் ? 
"அதில் ஒன்று சாதா வரிசை. அதுக்கு எல்லா டாக்குமெண்ட்டும் பக்காவா வைச்சிருப்பவர்களுக்கு. இதில் லோன் கிடைக்க தாமதம் ஆகும்.
மற்றது எக்ஸ்பிரஸ் கிரீன் சானல் வரி்சை. இதில் வெளிநாட்டுக்கு ஓடிப்போக பாஸ்போர்ட், விஸா,அடுத்த வாரத்தில் லோன் கிடைச்சதும் ஓடிப்போக விமான டிக்கெட் காட்டினால் போதும். உடனே சாங்ஷன் பண்ணிடுவோம்".



Tuesday 15 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (8)

(71)
"அவரு மோடி பொருளாதாரத்தின் கழுத்தை ஒரு திருகு திருகி விட்டு போனாலும் போனாரு அண்ணே,
இங்க 6 வது நாளா குவார்டர் பாட்டில் கழுத்து மூடி திருக முடியாத நாம சுய நினைவோட இருக்க வேண்டியதாப் போச்சேண்ணே".



(72)
"அந்த கட்சியிலிருந்து 4058 வது வட்டச் செயலாளரை நீக்கிட்டாங்களே. அப்படி என்ன செய்து விட்டாரண்ணே"?
"அது ஒன்னும் இல்லடா, மண்சோறு சாப்பிட 5 லோடு பச்சை மண்ணு வாங்கியதா கணக்குக் கொடுத்தாராம்".



(73)
"என்னடா சென்றாயா ஏண்டா இப்படி மூட் அவுட்டாகி மூலையில உக்கார்ந்திட்டே"?
"போண்ணே, புது 2000 ரூபாய் நோட்டில என் படம் போட்டிருந்தது ன்னு நினைச்சு ஆசையாக வாங்கிப் பார்த்தா எதோ சந்திராயனாமே அது படம் போட்டு இருந்திச்சண்ணே. அதான்ணே".



(74)
"அண்ணே உங்கள மாவட்டச் செயலாளரா கட்சி அறிவிப்பு வந்திருக்காமே. இந்தான்ணே என் எளிய பரிசு பிடிங்கண்ணே".
"ஏண்டா ஸ்வீட்டிற்கு பதிலா உறுகாய் பாட்டில், லூசாயிட்டயா"?
"அதெல்லாம் இல்லண்ணே. உங்களுக்கு இனிமே அதிகார போதை தலைக்கேறிடும் அப்படின்னு கட்சியில பேசிக்கிட்டாய்ங்க".



(75)
"கட்சியிலிருந்து நீக்கிட்டா என்னண்ணே, நாம 'மாற்ற முடியாமல் தவிக்கும் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் சங்கம்' ஆரம்பித்திரலாம்ணே. அதில் பணம் செலவு பண்ணி தலைவராயிடலாம் அண்ணே".






(76)
" நேற்று 'பழைய காலுறை' தொலைக்காட்சியில் 'மறைந்து நின்று ஏசு' நிகழ்ச்சியில் என் பேச்சு எப்படி டா இருந்திச்சு"?
"தலைவரே நல்லாத்தான் இருந்திச்சு. ஆனா என்னதான் ஆவேசமா பேசினாலும் தூங்கும் கருப்புப் பண முதலையை இடறாதே என்றெல்லாம் பேசறது கொஞ்சம் ஓவர்தான்ணே".



(77)
"கால மாற்றத்தில வர எல்லாம் தலை கீழா மாறிப்போச்சண்ணே".
"ஏன்டா, சொல்வதை கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லேன்"
"அதுவான்னே, முன்னெல்லாம் 'எம்பிளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச்' போன பல பேர் இப்ப 'எக்ஸ்சேஞ்ச் எம்பிளாய்மெண்ட்' க்கு போறாங்களே அத்த சொன்னேண்ணே".


(78)
"ஏண்டா மாரி, ஆன் லைன் பேங்கிங்தான் இப்பெல்லாம் பண்ணிட்டிருக்கேன் அப்படின்னு ஊர்க்குள்ள சொல்லிக்கிட்டு அலையறயாமே, எப்படா கம்பியூட்டர் எல்லாம் கத்துக்கிட்ட"?
"அட போங்கண்ணே, தினந்தினம் பேங்கில லைன்ல நின்னு நோட்டு மாத்திட்டு வரேனில்ல, அதை அப்படி பந்தாவா சொல்லிக்கிட்டேன்ணே".

(79)
"அந்த கல்யாண வீட்டில் சாப்பிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் கூப்பிட்டு இடது கையில் மருதாணி போடறாங்களே என்ன உபசாரம் என்ன உபசாரம்".
"அதெல்லாம் ஒன்றுமில்லை. யாரும் இரண்டாம் தடவை பந்திக்கு சாப்பிட வராமல் தடுக்க செய்த ஏற்பாடாம்".


(80)
"ஏண்ணே அம்மா, தம்பி, அக்கா, ஆயா, நைனா எல்லாரையும் பேங்குக்கு அனுப்பினீங்க. பேங்க் போயி மாத்த நாங்க  எல்லாம் இல்லை"?
"ஏன். அதில் என்ன சிக்கல்டா"?
"சிக்கல்லாம் இல்லண்ணே. எதிரிக் கட்சிக்காரங்கதான் கருப்புப் பண முதலையின் குடும்பம் நோட்டு மாற்ற தெருவில் நிற்கிறது ன்னு அவிங்க டீவி செய்தியில் போட்டு மானத்தை வாங்குறான்ணே".


Saturday 12 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (7)

(61)
"அண்ணே காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் அடியோடு ரத்தாகி விட்டதாம்ணே. ஒரு வேளை வேற எங்கியாவது மலைத்தேன் கிடைச்சிடுச்சிருச்சா அண்ணே"?



(62)
"உங்க தெருவில் சென்ட்ரல் கவர்மெண்ட் கஸ்டம்ஸில் வேலை பார்த்த பந்தா ஆபீசர் ஒருத்தர் இருந்தாரே ,அவர உங்களுக்குத் தெரியுமா"?
" ஓ, நல்லாத்தான் தெரியுமே"
"இப்ப எங்கே இருக்கார்"?
" லஞ்ச ஊழல் வழக்கில மாட்டிக்கிட்டு சென்ட்ரல் ஜெயிலில் கஷ்டத்தில இருக்கார்".




(63)
"என்னப்பா தேவராசா சோகமா நிக்கிறேயே என்ன பிரச்சனை"?
"அதுவா அய்யாவை பார்க்க வரவங்க ஏதோ ரூபாய் 50,100 ன்னு பிரியமா கொடுப்பாய்ங்க இல்லையா"
"ஆமா. அதில் என்ன சிக்கல்"?
"அந்த காசை எல்லாம் அய்யாவே பிடிங்கிக்கிட்டு பழைய 500,1000 நோட்டுகளை கொடுத்திட்டு போறார் சார்".

(64)
"அந்த 10 மாடி கவர்ன்மெண்ட் ஆபீசில் பேஸ்மெண்டில இருக்கிற ஆபீசர் பேரென்னப்பா? போற வர எல்லா பொதுமக்களையும் கடிச்சிக் குதறி எடுக்கிறாரே".
"அட, நீங்க நம்ம'காண்டுடீப்பன்' சாரைச் சொல்லுறீங்க போலிருக்கு".


(65)
"வீட்டுக்கு வீடு டெய்லி 2000/- ரூபாய் கொடுக்க நம்ம கிட்ட கவுர்மெண்ட் காண்ட்ராக்ட் விட்டிருக்கலாம் அண்ணே எலக்சன் டயத்தில கொடுக்கற ஸ்பீடுல இப்பக்குள்ள சத்தமில்லாம கொடுத்து முடிச்சிருப்போம். இப்படி ஜனங்கள லோ லோன்னு அலைஞ்சிருக்க மாட்டாங்க. ஹூம். யாருக்கு இதெல்லாம் புரியுதண்ணே".






(66)
அண்ணே நல்லா விசாரிச்சிட்டேன். நீங்க பிடிக்கறதற்குக் கேட்ட 'கருப்புப் பண முதலை' கள் எதுவும் முட்டுக்காடு முதலைப் பண்ணையில் இல்லையாம்ணே. எல்லாம் இறைச்சி,மீன் சாப்பிடும் முதலைங்கதானாம்".


(67)
"அண்ணே, உங்க ராஜ தந்திரம் யாருக்கும் வராதுண்ணே. இனிமே மாற்றவே முடியாது என்கிற நிலையில் ரூ.500,1000 பழைய நோட்டுகளை அள்ளிட்டுப் போய் எதிரிங்க கணக்கில் தலைக்கு 5 லட்சம் போட்டு வருமான வரி ரெய்டு பண்ண வச்சீங்களே, அங்கதான் நீங்க நிக்கிறீங்க தலைவரே.


(68)
"என்னடா, நேத்து முழுசும் ஆளையே காணல. எங்கிட்டு போய் தொலைஞ்ச"?
"அதுவாண்ணே நம்ம ஊட்டண்ட இருக்கிற ATM ல் பணம் எடுக்க நிறைய கூட்டம் வந்திச்சா, உடனே அங்க 10 ரூபாய், 20 ரூபாய்க்கு சிறப்பு வரிசை ன்னு போர்ட் வைத்து நானும் என் மச்சானும் பேங்க் பேரில் டிக்கெட் அடிச்சி சனங்களுக்கு பப்ளிக் சர்வீஸ் பண்ணிட்டிருந்தோம்ணே".


(69)
" சாக்பீஸில் 1,2 நம்பர் போட்டு 50 செங்கல் 4 செட் ரெடி பண்ணச் சொல்லிக் கேட்டீங்களேண்ணே. நம்பர் போட்ட கல் எதுக்கண்ணே"?
" நம்ம ஏரியாவில உள்ள 4 ATM முன்னால க்யூ வரிசையா தினம் காலையில் 5 மணிக்கே வச்சி ரிசர்வ் பண்ணிட்டு வந்துட்டா இடத்தை 50 ரூபாய்க்கு விக்கலாமேடா தம்பி".


(70)
"அண்ணே கவலைப்படாதீங்கண்ணே. நல்ல யோசனை ஒன்னு கைவசமிருக்கு"
"அப்படி என்னடா நல்ல யோசனை"?
"கல்யாண மண்டபம் ஒன்ன ஒரு வாரத்துக்கு சீப்பா எடுத்து
'ஸ்டாக் கிளியரன்ஸ் சேல் 
25% தள்ளுபடி, மெகா எக்ஸ்சேஞ்ச் ஆபர்'
போட்டு பழைய 500,1000 ரூபாய் நோட்டைக் எல்லாம் தள்ளி விட்றலாம்ணே".

Wednesday 9 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (6)

(51)
"அண்ணே செம்மரக்கட்டை கடத்திய வழக்கிலிருந்துதான் எப்படியோ தப்பிச்சீட்டீங்களே. அப்புறமும் ஏண்ணே விசனம்"?
"அண்ணி கிட்ட எவனோ செம்ம கட்டைய நான் கடத்தி மாட்டிக்கிட்டதா கொளுத்திப் போட்டு விட்டுட்டான்டா . ஊட்டாண்ட போயி ஒரு வாரமாச்சுடா".



(52)
"இந்த போலீஸ்காரங்க பாவம்ணே. மேலதிகாரிங்க கேஸ் பிடிக்க டார்கெட் வைக்கிறதால ரத்தக் கொதிப்பு வந்து விடுகிறதாம். சனங்க எல்லாரும் விதி மீறாமல் சரியான டாக்குமெண்டஸ் வைச்சுக்கிட்டு ஹெல்மெட் போட்டு வண்டி ஒட்டினால் இன்னும் ரத்தக் கொதிப்பு அதிகமாயிடுமே அண்ணே. இது அவிங்களுக்கும் புரியமாட்டேங்கு. என்னத்த சொல்ல".



(53)
"அந்த கோழிப்பண்ணை பள்ளிக்கூடத்தால ஒரே பிரச்சனை அண்ணே".
"என்னடா என்ன விஷயம்"?
"500,1000 ரூபாய் நோட்டெல்லாம் செல்லாது என்று ஆயிட்டதால,
எல்லா பெற்றோரும் கொறைஞ்சது ஒரு லட்சம் நன்கொடைப் பணத்தை 100 ரூபாய் நோட்டா மாற்றித் தரணுமின்னு பிரச்சனை பண்ணறாய்ங்கண்ணே".



(54)
"அந்த தனியார் பள்ளிக்கு கூடத்து வாசலில் என்ன கூட்டம் அலை மோதுகிறது"?
"100 செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்களை இப்ப மாற்றித் தருபவர்களுக்கு 2025 ஆம் வருடத்தில ஒரு எல் கே ஜி சீட் இலவசமா தராய்ங்களாம்ணே".


(55)
"என்னடா கண்ணகி சிலையண்ட ஒரே கூட்டமா இருக்கு. போலீஸ்காரங்க வேற எதோ செக் பண்ணிட்டிருக்காய்ங்க? என்ன விஷயம் பாரு"
"அது ஒண்ணுமில்லைணே, ஆதார் கார்ட் இல்லாம பீச்சில இலவசமா காத்து வாங்க வந்தவய்ங்களாம். இனிமேல ஆதார் இல்லாட்டா ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் கட்டணமாம்".





(56)
"அண்ணே நம்ம ஏரியா பெருமாள் கோவில், ஈஸ்வரன் கோயில் வாசலில்களில் உங்களிடம் உள்ள மாற்ற இயலாத 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பக்தர்கள் குங்குமம், திருநீறு மற்றும் பிரசாதங்களை மடித்து எடுத்துச் செல்ல தந்ததிற்கு நன்றி தெரிவித்து அறிவிப்பு வைச்சிருக்காங்க, பார்த்தீங்களா"?


(57)
செந்தில்: " புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டில 'சிப்' வைச்சிருக்காமே அண்ணே உண்மையா"?
கவுண்டமணி:"அட நாற நாயே நீ முதல்ல உன் டி்ராயரில் 'சிப்' வைச்சு தச்சிப் போடுடா".



(58)
"எங்க சார் டேபிள் சேர் எல்லாம் எடுத்திட்டு போகறீங்க"?
"500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வர ஆட்களுக்கு பார்ம் எழுதிக் கொடுத்து ஏதோ 5,10 சம்பாதிக்கலாமே. ரிட்டயர்ட் ஆகி வூட்டுல சொம்மாதானே இருக்கே ன்னு வேலை வெட்டி இல்லாம பிரண்ட்ஸோட ஊர் சுத்தற பிள்ளை இப்படி டேபிள், சேர் கொடுத்து அனுப்பிட்டான்பா".




(59)
"அண்ணே நல்லா விசாரிச்சிட்டேன்.
சிப்ஸ் இருக்காம். ஹாட் சிப்ஸ் கடையில விதவிதமா ரூ. 500,2000க்கெல்லாம் வச்சிருக்காய்ங்களாம்"



(60)
"அண்ணே, கவலைப்படாதீங்கண்ணே.ஒரு நாளைக்கு ரூ. 4000 மாத்தலாமாம். ஆதார் இருக்கிற 10000 பேரை 10 நாளைக்கு வேலைக்கு வைச்சி நம்ம கிட்ட உள்ளதில 40 கோடிய காப்பாத்திடலாமண்ணே. சம்பளமா சும்மா ஒரு 4கோடி  தந்திடலாம்ணே".

Monday 7 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (5)

(41)
"கட்சி விரோத நடவடிக்கைக்காக உங்களை கட்சி விட்டு நீக்கிட்டாங்களாமேண்ணே. என்ன ஆச்சண்ணே"?
"ஊழலை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட தலைவர் சொன்னாரா, அதுக்காக எதிரிக் கட்சிக் தலைவரை வித விதமா போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டேன்.அதுதான் தப்பாயிடுச்சுடா"


(42)
"அண்ணே நல்லா விசாரிச்சிட்டேன். அந்த ஆபீசருங்க எல்லாம் எதிரே இருக்கிற 'சங்கர் லஞ்ச் ஹோம்' ஓட்டலில் சாப்பாடு நேரத்தில் தான் லஞ்சம் வாங்குவாங்களாம்".
"அப்படியா, அதனாலதான் இப்போ அதன் பெயர 'சங்கர் லஞ்ச ஹோம்' ன்னு மாத்திட்டாய்ங்களா".


(43)
"புதிசா கட்டின கழிப்பறைக்கு உடனே உங்க பேர் வைச்சு போர்ட் படம் எல்லாம் சீக்கிரம் செய்துடணும்ணே".
"ஏண்டா, என்ன கிண்டலா"?
"இல்லண்ணே, குப்பைத் தொட்டியில் எழுதியிருக்கிற உங்க பெயரை அழிக்கணுமாம். தேர்தல் கமிஷனில் நிறைய பேர் புகார் கொடுத்திருக்காங்கண்ணு இன்னிக்கு தினமலர் பத்திரிக்கையில் 13 ஆவது பக்கத்தில செய்தி வந்திருக்கண்ணே”.


(44)
"உங்க ஆஸ்பத்திரியில டாக்டர், நர்ஸ் எல்லாம் ஏன் ஒரு கடிகாரத்தை சுற்றிட்டு வந்த பின்னால்தான் நோயாளியை பார்க்கிறாங்களே. என்ன காரணம்"?
"எங்க ஆஸ்பத்திரி ரவுண்ட் த கிளாக் சர்வீஸ் ஆஸ்பத்திரியாச்சே அதனால்தான் சார்".


(45)
"அண்ணே நாம போன அந்த ஆபீசில் எல்லா ஊழியர்கள் மேசையிலும் 24×7 அப்படின்னு போட்டிருக்கு. ஆனால் வெளியே அலுவலக வேலை நேரம் 10 முதல் 5 வரை மட்டும் தான் என்று போட்டிருக்கு. அதற்கு அப்போ என்னண்ணே அர்த்தம்"?
"அது எல்லா நாளும் எந்த நேரமும் லஞ்சம் வாங்கப்படும் என்பதை நேரடியாக போட முடியாதே. அதனால் சிம்பாலிக்கா போட்டிருக்காய்ங்க".





(46)
"அந்த அலுவலகத்தில் மனுக்களை போடும் பெட்டிக்குப் பக்கத்தில் B D M என்று எழுதிய அறையில் பெரிய இயந்திரம் உள்ளதே அண்ணே. அது என்ன இயந்திரமண்ணே"?
"அதுவா, அது 'BRIBE DEPOSIT MACHINE' அதில் லஞ்சத்தை டிப்பாசிட் பண்ணிடலாமாம்".


(47)
நேற்று சரவணா ஸ்டோர்ஸ்க்கு போயிட்டு வந்த நம்ம ஆபீசர் படு சுறுசுறுப்பாக இருக்காரண்ணே". நிறைய புதுமை எல்லாம் உடனே செய்து விட்டாரண்ணே".
"அப்படியா. என்ன புதுமை செய்திருக்காரு"?
"ஆபீஸ் வாசலிலேயே எந்த தளத்தில் எந்த ஆபீசருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கணும் என்று தெளிவா விவர அட்டை வழங்க இரண்டு பேரை உடனே இன்னிக்கு போட்டுட்டாரேண்ணே".



(48)
"அண்ணன் ஏன் இன்னிக்கு கொஞ்சம் விந்தி விந்தி நடக்கறாரு தம்பி"?
"அதுவா, கட்சி தாவும் போது கால் சறுக்கியதில் சுளுக்கிடுச்சாம்ணே".



(49)
"நீங்க பெண் விடுதலைக்கு பல தடவை போராடியவர் என்று பேசிக்கிறாங்க அண்ணே. நெம்ப பெருமையாக இருக்கண்ணே".
"ஏய், அது அண்ணியை கள்ள சாராயம் வித்த கேசில் பிடிச்சபோதெல்லாம் போலீஸ் ஸ்டேசனில் பிரச்சனை பண்ணினதை உள்குத்தா சொல்லறாய்ங்கடா".


(50)
"எல்லா பத்திரிக்கை மேலும் அண்ணன் பயங்கர கோபமாக இருக்காரு. எந்த நிருபரையும் உள்ள விடாதேன்னுட்டாரு".
"அப்படியா. என்ன காரணம்"?
"சட்டசபையில் அவர் முதமுதலா வீரஉரை ஆற்றினாரில்லையா அதை பத்திரிக்கையில் 'கன்னிப் பேச்சு' என்று போட்டு அவமானப்படுத்திட்டாங்களாம்".




Saturday 5 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (4)

(31)
"அண்ணே நேற்று இரவு அந்த படத்தயாரிப்பாளர் உங்களை கதை சொல்ல வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தாரே, காயா பழமாண்ணே"
"அந்த சோகக் கதையை ஏன் கேட்கிற, அவரு பேரனை இரவில் தூங்க வைக்க கதை சொல்ல வரச் சொன்னாராம்".

(32)
"ஷாப்பிங் போன இடத்தில் 'பார் கோட்'(Bar Code) என்ற பெயரைப் பார்த்து கம்ப்யூட்டர்,லேப்டாப் விற்பாய்ங்க போல என்று நினைச்சேன்.
உள்ள போய் பார்த்தா 'பட்டாபட்டி' அண்டர்வேர் விக்கிறாய்ங்கண்ணே".


(33)
"தலைவரே, தலைநகரை அமைதிப் பூங்காவா மாற்ற என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று காவல் துறைத் தலைவர் கேட்கிறார்"
"எல்லாப் பூங்காகளிலும் பேசுவதற்குத் தடை விதித்து விடலாம். மீறி யாராவது பேசினால் கைது பண்ணச் சொல்லிடலாம்"


(34)
"பிளாட்பாரங்களை தடுத்து நாம  வச்ச மெகா  ஃபிளக்ஸ் பேனர் பத்தி மக்கள் என்னடா பேசறாங்க"?
"செமண்ணே".
"அப்படியா"?
"ஆமண்ணே,  நாம நம்ம இடத்தில்
சரியாத்தான் வச்சிருக்கிறோம்  அதிலே தப்பே இல்லை என்கிறாய்ங்க".

(35)
"அண்ணே அந்த  அமைச்சரை ஏன் திடீரென்று பதவி நீக்கம் பண்ணிட்டாங்க"?
அத ஏன்டா கேக்கற, இப்பத்தான் அவர் போலி மந்திரி என்று கட்சியில கண்டுபிடித்தார்களாம்".

(36)
"என்னண்ணே நம்ம தலைவர் பேரணியில ஒரே வட நாட்டு ஆளுங்களா  இந்தியில கோஷம் போட்டுக்கிட்டு போறாய்ங்க"?
"அது பேரணிக்கு உள்ளூர் ஆளுங்க கூலி அதிகம் கேட்கறதால காண்ட்ராக்டர் இப்படி ஏற்பாடு பண்ணிட்டாராம்டா".

(37)
"அண்ணே நிறைய சைனாக்காரங்க வந்து நம்ம கட்சி ஆபீசில் உக்கார்ந்திருக்காங்களே, தலைவர் சீனாவில கட்சி தொடங்கப் போறாராணே"?
"இல்லை டா, அவங்க எல்லாம் கியாரண்டி இல்லாத சீப் ரேட் டூப்ளிகேட் தொண்டர்களாம்". சைனாவிலேர்ந்து மத்த கட்சிகளுக்கு விற்க  தலைவர் இறக்குமதி   செய்திருக்கார்".

(38)
"அந்த குப்பைத் தொட்டி பக்கத்து பில்லர் பாக்ஸிலிருந்து மின்சாரம் திருடிய வழக்கில் நீங்க சொன்ன பதிலைக் கேட்டு நீதி மன்றமே திகைச்சிப் போயிட்டதா கேள்விப்பபட்டேன்ணா. அப்படி என்னண்ணா சொன்னீங்க"?

"பழைய கெட்டுப் போன மின்சாரத்தை எல்லாம் குப்பையில அரசாங்கம் கொட்டியிருக்குன்னு
நினைச்சி வேஸ்ட்டா போறத  ஏழை நான் பயன்படுத்தினேன் என்றுதான் சொன்னேன் பா".


(39)
"அண்ணே வீர வாள் பரிசளித்தாங்களே அப்போ என்ன மனதில் தோனிச்சு "?
" சே, என்னடா வாழ்க்கை இது. கத்தியை  கொடுத்து வெட்டக் கூடாது என்கிறாய்ங்க. போறாக்குறைக்கு   ரத்தம் சிந்தத் தயார் ன்னு  முழுமனசோட  சொல்ல ஒரு சித்தப்பு கூட நமக்கு இல்லையே அப்படின்னு வருத்தமா இருந்திச்சுடா".


(40)
"3027 வட்டத்தின் சார்பாக உங்களுக்கு சிலை வைக்கறேன் வந்தவய்ங்களை ஏன் வேண்டாம்னு திருப்பி அனுப்பிட்டீங்க"?
"அந்த வட்டச் செயலாளர் பிடிக்காதவய்ங்க சிலை மேல எச்சம் போட புறாங்களை பழக்கவருன்னு தக்க சமயத்தில 406 வது மாவட்டச் செயலர் தகவல் சொல்லிக் காப்பாத்திட்டாரு".


அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (3)

(21)
மணல் கொள்ளையர்களுக்கு பாடம் புகட்ட ஆசிரியர்கள் தேவை!
டுபாக்கூர் நாட்டு அரசு அறிவிப்புகள்
எண் டுநாஅ/1268/28.10.3046

பதவி - மு.நி.பேராசிரியர்( மண்ணியல்)
எண்ணிக்கை: 100 பதவிகள்
சம்பளம் - ரூ 20000 /- மாதம்
தகுதி - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து *M.Sr பட்டம்
மற்றும் மண்பாடி லாரி, JCB Pokclain ஓட்டுதலில் ஓராண்டு அனுபவம்.
வயது - 18 க்கு மேல்
* Master of Sand Robbery
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.01.3047 மாலை 5 மணி வரை
விண்ணப்பிக்க கட்டணம் : ரூ5000/-
(திருப்பித்தரப்படமாட்டாது)
இதர சலுகைகள்(லஞ்சம் உட்பட) தகுதி அடிப்படையில் வழங்கப்படும்.


(22)
"ஏய், என்னடா வீட்டு முன்னால ஒரே அட்டை டப்பாவா அடுக்கி வைச்சிருக்கு"
"அதுவாண்ணே, நீங்கதான் மாமூலா 'டப்பாஸ்' அனுப்பி வைக்கச் சொன்னீர்களாமே"


(23)
"அந்தக் கட்சிக் தலைவரை புரிஞ்சிக்கவே முடியாது அண்ணே"
அப்படியா! என்ன சொல்ரே?
"நம்ம தலைவர் நம்பிக்கையோட தீர்மானம் கொண்டு வராரு அதை ஆதரிக்காம அவரு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால்தான் ஆதரிப்பாராம் அண்ணே".


(24)
உடும்பை அறுத்து   ரத்தத்தை பிளாஸ்டிக் டம்ளரில் பிடித்து சோடா ஊற்றிக் குடித்தவரை போலீஸ் தேடுகிறது

பத்திரிக்கைச் செய்தி 29/10/2016.

இன்ஸ்பெக்டர்:
"குடிச்சிட்டு பிளாட்பாரத்தில படுத்திருக்கிற அந்த ஆளை எழுப்பி கூட்டி வர முடியலையா? என்னய்யா நினைவு இருக்கா"?
கான்ஸ்டபிள்:
"நினைவு எல்லாம்  இருக்கு அய்யா. அவன் உடும்பு இரத்தம் குடிச்சிட்டு  உடும்புப்பிடியா  படுத்திருக்கானாம் வேலையத்த பய".


(25)
"அண்ணே அந்த ஊரில புதுசா நாய் பண்ணை ஆரம்பிச்சிருக்காய்ங்க போல,  ஊருக்குள்ள ஒரே குரைப்புச் சத்தம்".
"அட , அது கேரளாலிருந்து இறக்குமதியா  வெறி பிடித்த தெருநாய்களை லாரியில ஏத்தி அனுப்பியிருப்பாய்ங்க,  ஆஸ்பத்திரி குப்பை அனுப்பின மாதிரி".


(26)
"தலைவரின் செயற்குழுக் கூட்டம் படு உருக்கமா  இருந்திச்சாமே"?
"ஆமண்ணே, திடீர்னு கரண்ட்  போயிட்டதுல ஏர்கண்டிசன், ஃபேன் எதுவும் வேலை செய்யலை. ஒரே வேக்காடு. புழுக்கத்தில உருக்கம்".


(27)
"அண்ணே அரசாங்கத்திலிருந்து என்னமோ நம்ம தெருவில் எல்லாருக்கும் நோட்டீஸ் கொடுத்தாங்களாமே? என்ன விஷயம்?

"நாடு ஏழையா இருக்கறதுக்குக் காரணம் வீடுங்க வாஸ்துப்படி இல்லாததுதான். அதனால எல்லா வீடுகளையும் இடிச்சு கட்ட வேண்டும் என்று வாஸ்து துறையிலிருந்து கொடுத்திருக்காங்க”.


(28)
"ஃபுல்லா தண்ணியடிச்சிட்டு மப்பில பிரச்சனை பண்ணிய அந்த போலீஸ்காரரை என்ன பண்ணினாங்க அண்ணே"?
"மொதல்ல 'தண்ணியில்லா காட்டுக்கு' மாற்ற நினைச்சாங்களாம் , ஆனா அப்படி ஒரு இடமும் தமிழ் மண்ணில் இல்லாததால்
'கட்டுப்பாட்டறைக்கு' மாத்திட்டாய்ங்க".


(29)
"அடுத்த மூன்றாண்டுகளில் நம் நாடு பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை எட்டி விடும்"  மத்திய அமைச்சர் தகவல்.

அப்புறமா எந்த நாடும் "நீ என்ன பெரிய பருப்பான்னு" நாக்கு மேல பல்லப் போட்டு நம்ம நாட்டைப் பார்த்து கேட்க முடியாது பாத்துக்கிடுங்க. ஆமாம்.


(30)
"அண்ணே வெவசாயிக்கும் தூதருக்கும் என்னண்ணே வித்தியாசம்"?
" அட, இது கூடவா தெரியாது  வெரங்கெட்டவனே.
வெவசாயி உழவு வேலை செய்வாரு
தூதரு உளவு வேலை செய்வாரு அம்புட்டுத்தான்".

Friday 28 October 2016

சாலைக் குழந்தை

(1) சாலைக் குழந்தை கேட்டவரம்

நர்சிங் ஹோமில் பிறக்கவில்லை
தடுப்பூசி போட்டதில்லை
குளிச்சது கூட கார்ப்பரேசன் கக்கூஸ் தொட்டித் தண்ணியில தான்
எண்ணெய் குளி, சுடுதண்ணி குளி என்னன்னே தெரியாது
படுத்தது  எல்லாம் பிளாட்பார மரத்தடியில் தான்
பள்ளிக்கோடம் போக ஆசை தான்
ஆனா பாழாப் போன ஆதார் இல்லாம போகலை
அப்பனுக்கு கோட்டர் வாங்க போனது தான் என் ஷாப்பிங்
கணேஷ் பவன் ஊசிப்போன பலகாரம் தான் இதுவரை சாப்பிட்ட விருந்து
என் கண்ணுமின்னயே ஆத்தாளை அப்பன் போட்டு அடித்து தான் பார்த்த சண்டைப் படம்
சரி எல்லாம் போகட்டும் சாமி
இதுவரை எனக்கு எந்த வரமும் நீயும் தரலை
நானும் கேட்கலை
இந்த வாழ்வே பழகிடுச்சு
கூவம் நாத்தம் சுவாசிச்சு சென்ட் கூட நாத்தம் ஆகிப் போச்சு
சாவு ஊட்டுல டான்ஸ் ஆடி பசி மறக்க பழகிப் போயாச்சு
இப்ப ஒரே ஒரு வரம் கேட்கிறேன்
ஊரோட தீபாவளியாம் பட்டாசு வெடிச்சு  கொண்டாடறாங்க
அந்த பெரிய பணக்காரங்க வீட்டுப் புள்ளை போடற இந்த குருவி பட்டாசு  வெடிக்காத  பண்ணு
இந்த கிளிஞ்ச டவுசர் பாக்கெட்டில போட்டுக்கிறேன் அப்புறமா
நான் எடுத்து வெடிக்க
வரம் கேட்கிறேன் சாமி, தருவியா?


(2) ஜீவகாருண்யம்

"குட்மார்னிங் சார்.  அப்பாக்கு உடம்பு சரியில்லையாமே. இப்போ  எப்படி இருக்காங்க சார்"?

"குட்மார்னிங். ஒரே  தொந்தரவு, யூரின் போகணும், பாத்ரூம் போகணும் என்று.

 பணம் செலவானாலும்  பரவாயில்லைன்னு  ஹோமில் சேர்த்திட்டேன், ஆம்பிளை நர்ஸுங்க கவனிச்சிக்கிறாங்க.

எனக்கு சுத்தமா நேரமும் இல்லை.
நமக்கும் அருவெருப்பு பிரச்சனை இல்லை பாருங்க" என்றவர்,

 பொறுமையாக கையில் பிடித்திருந்த டாபர்மேன் இயற்கை உபாதை முடிக்க அரைமணி நேரமாக தெருவில் அலைந்து கொண்டிருந்தார் 'டாமி' இழுத்த இடத்திற்கெல்லாம் நாயாக.


(3) குடும்ப வாழ்க்கை

அந்த அனைத்து மகளிர்
 காவல் நிலையத்தில்
பல காலமாய் நிறுத்தி
வைக்கப்பட்ட  கார்களின்
அடர்ந்த புழுதி படிந்த
பின்பக்கத்து  கண்ணாடிகளில்
 தன் பிஞ்சு  விரலால்
அம்மா, அப்பா, குழந்தை, குடும்பம்
என்று எழுதி பாடம் நடத்தி
டீச்சர் விளையாட்டு விளையாடிக்
கொண்டிருந்தது
நேற்று ரெய்டில் பிடிபட்ட பாலியல் தொழிலாளியின் அனாதையான குழந்தை.


அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (2)

(11)
"நம்ம போராட்டத்துக்கு உரிய மரியாதையை அரசாங்கம் கொடுக்காத கேவலப்படுத்துறத, கண்டிக்கணும் அண்ணே".
"என்னடா சொல்லற, புரியலை".
"போராட்டத்தில எத்தினி கடையை,பஸ் எல்லாம் உடைச்சோம், தீ வைச்சோம், எத்தினி பேரை அடித்தோம். வெறும் 144 தடையுத்தரவுதான் போட்டிருக்காய்ங்க. நம்ம கவுரதைக்கு குறைந்தது 500,600 தடையுத்தரவு போடத்தாவல"?




(12)
 "அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு வாசல் வரைக்கும் போய் விட்டு உடனேயே திரும்பி வந்து போட்டீங்களே, ஒன்னுமே புரியல அண்ணே"
"அது சகுனமே சரியில்லை. கூட்டம் நடக்கிற ரூம் கதவில் புஸ் (PUSH) ன்னு போட்டிருந்தது, அதான் திரும்பிட்டேன்".



(13) 
"இளவல் அடலேறாக தன்னந்தனியனாய் கர்நாடகத்திற்கு பாடம் கற்பிக்கச் செல்வதை நினைத்து நெஞ்சம் பூரிக்கிறது என்று தலைவர் நம்ம தம்பிய வாழத்தினாராமே அண்ணே. ஃபிளக்ஸ் பேனர் ரோடு முச்சூடும் பார்த்தேன்ணே.
நீங்க வீரப்பரம்பரை அண்ணே".
"ஆமாம். தம்பி பெங்களூருல வாத்தியார் வேலைக்கு சேர நாளைக்கு புறப்படுதுடா".


(14)
 "அந்த கட்சி சார்பாக போட்டியிட ஆள் கிடைக்கவில்லை போலிருக்கண்ணே".
"அப்படியா, யாரு சொன்னாங்க"?
"வேட்புபாளர் விருப்ப மனுவிற்கு கிரெடிட் கார்ட் வசதி உண்டு. 100% கேஷ் பேக் ஆபர், கிரெடிட் கார்டுகளுக்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை. உடனடி பைனான்ஸ் வசதி உண்டு. உடனே வருக என்று விளம்பர போஸ்டர் சிட்டி முழுசும் ஒட்டியிருக்காங்கண்ணே".





(15) 
கோட்டையில் பாம்பு - தினமலர் செய்தி(28.10.16)
ஒரு வேளை ஊழல் பெருச்சாளி எதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்து தேடிப் போயிருக்குமோ?



(16)
பண முதலைகளுக்குக் கிடிக்கிப்பிடி!
பண முதலைகளை பாதுகாக்க புதியதாக பண்ணை அரசு அமைக்காது!!
சக்கரவர்த்தி அரசவையில் திட்டவட்டம்!!!
இப்போது உள்ள அரசவையும், அமைச்சருமே போதுமானது என்று அறிவிப்பு.


(17)
"அந்த 'மானாவாரி' நெலத்த அண்ணன் வாங்கி தியேட்டர் கட்டினாரே, வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சா"?
"ஆமண்ணே, எல்லாம் முடிச்சி, இப்போ தீபாவளிக்கு 'கடலை' போட்டிருக்காரு".


(18)
"ஊழல் பெருச்சாளிகளைப் பிடிக்க மலைப்பாம்புகளை அரசு வாங்கும்"
அரசவையில் மன்னர் திடீர் அறிவிப்பு!!!
"அண்ணே, அந்த பாம்புகளின் மேல அரசு முத்திரை, பதிவெண் எழுதும் ஒப்பந்தத்தை மன்னரிடம் சொல்லி என் மச்சானுக்கு வாங்கிக் கொடுங்கண்ணே".


(19)
"மணல் கொள்ளையர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும், அதற்கான ஆசிரியர்கள் விரைவில் தேரந்தெடுக்கப்படுவார்கள்"
என்று அரசவையில் மன்னர் அறிவிப்பு.

(20)
பத்திரப் பதிவில் அதிரடி!
இனி இரு வண்ண தாள்களில் பத்திரப் பதிவு!!
மக்களுக்குச் சலுகை அறிவிப்பு!!!
டுபாக்கூர் நாட்டில் இனிமேல்
உரிமையுள்ள பத்திரங்களுக்கு வெள்ளை நிற முத்திரைத் தாளும்,
உரிமை இல்லாத பத்திரங்களுக்கு பச்சை நிற முத்திரைத் தாளும் பயன்படுத்தப்படும்.
உரிமை இல்லாத பத்திரப் பதிவுக்கு
பத்திரத்தின் உள்ளே புக் மார்க் ஆக வைக்கப்படும் ரூ500, ரூ1000 துண்டுச் சீட்டுகள் இனி வைக்க தேவையில்லை என்று அந்நாட்டின் மன்னர் அறிவித்தார்.
இதனால் ஏழை மக்கள் பயனடைவார்கள் எனத் தெரிகிறது.


Tuesday 25 October 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (1)

(1) "அண்ணே தலைவர் என்னதான் உங்க பால்ய நண்பர் என்றாலும் நீங்க பொதுக்குழுவில் அவரை அப்படி 'சித்தப்பு' என்று கூப்பிடறதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்"


(2) "அண்ணே, தலைவர் உங்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீங்கி விட்டாரே, இனி என்ன செய்ய உத்தேசம்"?
"ஹூம். கடவுள் இருக்காண்டா குமாரு.  நாட்டுக் கட்சியில ஆல்டோ தரதா சொல்லி தூது விட்டிருக்காய்ங்க"



(3) "என்னதான் பல்வலி அதிகமா இருந்தாலும் உள்ளூரில டாக்டரை பாருங்கண்னு சொன்னோம்.  அத்தெ கேட்காத டெல்லி யில போய் வைத்தியம் பாரத்தீங்க, இப்ப பாருங்க டெல்லிக்குப் போன அண்ணன் பல்லைப் புடுங்கிட்டாய்ங்க ன்னு எதிர் கோஷ்டி சொல்லிட்டுத் திரியுது அண்ணே”



(4) "என்னப்பா, நம்ம வூட்டு மின்ன ஒரே ரௌடிகளா நிற்கிறாய்ங்க, என்ன விசயம்"?
"இந்த காளிப்பயல முளைப்பாரிக்கு அண்ணன்  ஆள் எடுக்கிறாருன்னு டவுணுக்குப் போய் ஆள் கூட்டி வரச் சொன்னீக. அந்த பொச கெட்ட பய அண்ணன் மொள்ளமாறிக்கு ஆள் எடுக்கிறாய்ங்கன்னு டவுணுல போய்    தப்பா சொல்லியிருக்கான் அண்ணே"



(5) "அண்ணே, அந்த கேரளா பார்ட்டி ரொம்ப குசும்பு புடிச்சவன்".
"அப்படியா என்ன சொன்னான் அவன்"?
பாலாற்று மண்  பத்து லோடு வேணும் என்று கேட்கலமில்ல, அத்தெ விட்டு திராவிட மண்ணு பத்து லோடு அனுப்பச் சொல்லுன்னு நக்கலா பேசறான்ணே".







(6) "ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு ஆயிரம் தொண்டர்களை கட்சி மாத்தினதுக்கு என்ன கிடைச்சுது அண்ணே"?
"அந்த வயித்தெரிச்சல ஏன் கேட்கிற. 2% கமிஷனா இருபது தொண்டர்களை நம்ம கட்சிக்கு வைச்சிக்கச் சொல்லிட்டாங்க".



(7) "அந்த கட்சியில புதுசா நேர்முகத் தேர்வு வைச்சதில் உங்கள எப்படின்ணே எடுத்த எடுப்பில தலைமைக் கழக பேச்சாளராக்கினாங்க"?
 ஸ்லோகன் சொல்லச் சொல்லிக் கேட்டாங்க. எல்லாரும் ' தூக்குமேடை பஞ்சு மெத்தை' அப்படில்லாம் சொன்னாங்க. நான் 'கரண்டுக் கம்பியும் கட்டிக்கரும்பு, தண்டவாளமும் தலையணை' என்று சொன்னேன்.தலைவர் ஒடனே ஓகே சொல்லிட்டாரு".



(8) "என்னண்ணே கடல் தண்ணி, கூவம் தண்ணி எல்லாம் 10 மில்லி சாஷே, ஆஸ்பத்திரி கழிவுகள் 10 கிராம் பாக்கெட் போட  பேங்க் லோன் அப்ளிகேஷன் சேங்ஷன் ஆயிடுச்சா"?
"ஆமாடா, இப்போ அரசியல் தலைவர்களுக்கு போராட்டம் பண்ணறவய்ங்க இதையெல்லாம் தபாலில் அனுப்புறாய்ங்க. அதான் மேனஜரை கேட்டேன். புதிய வியாபார உத்தி ன்னு உடனே சாங்ஷன் பண்ணிட்டாரு".



(9) "இந்த புலனாய்வு பத்திரிக்கை ஆளை ஏன்ணே பகைச்சிக்கிட்டீங்க"?
"என்னடா என்ன ஆச்சு"?
"போன வாரம் போத்தீஸில் இரண்டு புடவை எடுத்து ஒன்னை அண்ணிக்கும்,இன்னொன்னை மாரியம்மன் கோவிலுக்கும் கொடுத்தீங்களா.
கிரித்திரியம் புடிச்சவன்  அதை  ஒரு புடவை மனைவிக்கும் மற்றதை மாரியம்மாக்கும் கொடுத்தா எழுதிப்போட்டான். அண்ணி செமகாண்டுல இருக்காங்கண்ணே".



10) "அண்ணே முன்ன நாம ஓட்டுக்கு காசு கொடுத்ததை நினைவுபடுத்தி  எலக்சன் போஸ்டரில் என்ன வாக்கியம் போடலாமின்னு கேட்டீங்களே. அதுக்கு ஸ்லோகன் தயாரா இருக்கண்ணே".

"அப்படியா, சொல்லு பார்ப்போம்".

"அன்றே  ஆயிரமாயிரமாய் கொடுத்துச் சிவந்த கரத்தை இன்று ஐந்தாண்டுகள் மேசை தட்டிச் சிவக்க, நம் டுபாக்கூரார்  அண்ணன் அவர்களுக்கே  வாய்ப்பளியுங்கள்"