Friday 28 October 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (2)

(11)
"நம்ம போராட்டத்துக்கு உரிய மரியாதையை அரசாங்கம் கொடுக்காத கேவலப்படுத்துறத, கண்டிக்கணும் அண்ணே".
"என்னடா சொல்லற, புரியலை".
"போராட்டத்தில எத்தினி கடையை,பஸ் எல்லாம் உடைச்சோம், தீ வைச்சோம், எத்தினி பேரை அடித்தோம். வெறும் 144 தடையுத்தரவுதான் போட்டிருக்காய்ங்க. நம்ம கவுரதைக்கு குறைந்தது 500,600 தடையுத்தரவு போடத்தாவல"?




(12)
 "அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு வாசல் வரைக்கும் போய் விட்டு உடனேயே திரும்பி வந்து போட்டீங்களே, ஒன்னுமே புரியல அண்ணே"
"அது சகுனமே சரியில்லை. கூட்டம் நடக்கிற ரூம் கதவில் புஸ் (PUSH) ன்னு போட்டிருந்தது, அதான் திரும்பிட்டேன்".



(13) 
"இளவல் அடலேறாக தன்னந்தனியனாய் கர்நாடகத்திற்கு பாடம் கற்பிக்கச் செல்வதை நினைத்து நெஞ்சம் பூரிக்கிறது என்று தலைவர் நம்ம தம்பிய வாழத்தினாராமே அண்ணே. ஃபிளக்ஸ் பேனர் ரோடு முச்சூடும் பார்த்தேன்ணே.
நீங்க வீரப்பரம்பரை அண்ணே".
"ஆமாம். தம்பி பெங்களூருல வாத்தியார் வேலைக்கு சேர நாளைக்கு புறப்படுதுடா".


(14)
 "அந்த கட்சி சார்பாக போட்டியிட ஆள் கிடைக்கவில்லை போலிருக்கண்ணே".
"அப்படியா, யாரு சொன்னாங்க"?
"வேட்புபாளர் விருப்ப மனுவிற்கு கிரெடிட் கார்ட் வசதி உண்டு. 100% கேஷ் பேக் ஆபர், கிரெடிட் கார்டுகளுக்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை. உடனடி பைனான்ஸ் வசதி உண்டு. உடனே வருக என்று விளம்பர போஸ்டர் சிட்டி முழுசும் ஒட்டியிருக்காங்கண்ணே".





(15) 
கோட்டையில் பாம்பு - தினமலர் செய்தி(28.10.16)
ஒரு வேளை ஊழல் பெருச்சாளி எதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்து தேடிப் போயிருக்குமோ?



(16)
பண முதலைகளுக்குக் கிடிக்கிப்பிடி!
பண முதலைகளை பாதுகாக்க புதியதாக பண்ணை அரசு அமைக்காது!!
சக்கரவர்த்தி அரசவையில் திட்டவட்டம்!!!
இப்போது உள்ள அரசவையும், அமைச்சருமே போதுமானது என்று அறிவிப்பு.


(17)
"அந்த 'மானாவாரி' நெலத்த அண்ணன் வாங்கி தியேட்டர் கட்டினாரே, வேலை எல்லாம் முடிஞ்சிடுச்சா"?
"ஆமண்ணே, எல்லாம் முடிச்சி, இப்போ தீபாவளிக்கு 'கடலை' போட்டிருக்காரு".


(18)
"ஊழல் பெருச்சாளிகளைப் பிடிக்க மலைப்பாம்புகளை அரசு வாங்கும்"
அரசவையில் மன்னர் திடீர் அறிவிப்பு!!!
"அண்ணே, அந்த பாம்புகளின் மேல அரசு முத்திரை, பதிவெண் எழுதும் ஒப்பந்தத்தை மன்னரிடம் சொல்லி என் மச்சானுக்கு வாங்கிக் கொடுங்கண்ணே".


(19)
"மணல் கொள்ளையர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும், அதற்கான ஆசிரியர்கள் விரைவில் தேரந்தெடுக்கப்படுவார்கள்"
என்று அரசவையில் மன்னர் அறிவிப்பு.

(20)
பத்திரப் பதிவில் அதிரடி!
இனி இரு வண்ண தாள்களில் பத்திரப் பதிவு!!
மக்களுக்குச் சலுகை அறிவிப்பு!!!
டுபாக்கூர் நாட்டில் இனிமேல்
உரிமையுள்ள பத்திரங்களுக்கு வெள்ளை நிற முத்திரைத் தாளும்,
உரிமை இல்லாத பத்திரங்களுக்கு பச்சை நிற முத்திரைத் தாளும் பயன்படுத்தப்படும்.
உரிமை இல்லாத பத்திரப் பதிவுக்கு
பத்திரத்தின் உள்ளே புக் மார்க் ஆக வைக்கப்படும் ரூ500, ரூ1000 துண்டுச் சீட்டுகள் இனி வைக்க தேவையில்லை என்று அந்நாட்டின் மன்னர் அறிவித்தார்.
இதனால் ஏழை மக்கள் பயனடைவார்கள் எனத் தெரிகிறது.


3 comments:

  1. இரசித்து சிரித்தேன் நண்பரே

    தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. நன்றி நண்பரே. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete