Monday 24 October 2016

மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (9)

(81) "டுபாக்கூர் நாட்டின் நிதியமைச்சர் இதற்கு முன் என்ன வேலையிலிருந்தார் அமைச்சரே"?

"நகைக்கடை வைத்திருந்தார் மன்னா".

"அது தானே பார்த்தேன். ஒவ்வொரு பத்து ரூபாய்க்கும் சேதாரம் இரண்டு ரூபாய் என்று அங்கே சுற்றுலா போன இளவரசரிடம் வாங்கி விட்டார்களாம்".


(82) "மன்னா, சீன பட்டாசுகளை விற்கத்தடை போட்டாலும் கள்ளத்தனமாக விற்கிறார்கள், என்ன செய்யலாம்"?

"எல்லா சீன பட்டாசுகளையும் அரசே கொள்முதல் செய்து பதிலுக்கு போலி பத்து ரூபாய் நாணயங்களாகக் கொடுத்து விடலாம் அமைச்சரே"



(83) "மன்னர் மன்னா, நேற்றிரவு நம் படை வீரர்கள் உங்கள் தலைமையில் வெற்றிகரமாக'சர்ஜிகல் ஸ்டிரைக்' செய்து திரும்பினார்களாமே. காலையில் பத்திரிக்கைகளில் பார்த்தேன்". 

"ஆமாம். பதுங்கு குழிக்கு மின்னல் வேகத்தில் சென்று எறும்புப் புற்றுகளில் கெமாக்ஸின் தூவி, கரப்பான் பூச்சிக்கு ஹிட் அடித்து விட்டு உடனே திரும்பி விட்டோம் அமைச்சரே".

(84) தீபாவளி போனஸ் கேட்டு போராடி வந்த அரண்மனை ஊழியர்களின் சங்கப் பிரதிநிதிகள் உங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியபோதும் பின்னரும் வாய் மூடி செல்வது ஆச்சரியமாக உள்ளது மன்னா. இது எப்படி சாத்தியம்"?


"பேச்சு வார்த்தை தொடங்கும் முன் அனைவருக்கும் அரசியார் தயாரித்த தீபாவளி இனிப்பு கொடுத்தேன். அதை தின்ற பின் வாய் திறக்க அவர்களால் எப்படி இயலும் அமைச்சரே"



(85) அண்டை நாட்டரசர் வாயாலேயே வடை சுடுவதில் வல்லவர் என்பதில் சந்தேகமே இல்லை அமைச்சரே"

"அதை எப்படி மன்னா கண்டுபிடிக்க உங்களால் முடிந்தது"?

"எப்போதுமே அவரைத் சுற்றி பத்து காக்கைகள் ஆமாம் போட்டபடி கூடவே வருவதைப் பாரக்கிறேனே".





(86) "அமைச்சரே, ஒரு வாரம் மும்பைக்குப்    போய் குடும்பத்துடன் தங்கியிருந்து வாங்கி வரும் அளவுக்கு என்ன வாங்கப் போகிறீர்கள்"

"அதுவா மன்னா, தங்கள் ஆணைப்படி பங்குச் சந்தையில் நல்ல பங்குகளைப் பாரத்து தேர்வு செய்து உங்களுக்கு வாங்க வேண்டுமல்லவா".



(87) பக்கத்து நாட்டரசர் மிகவும் ராஜதந்திரமாகப் பேசுவாராமே உண்மையா அமைச்சரே"?

"ஆம் அரசே, உங்களை சில்லறைப் புத்தி சின்னப்பயல் என்பதை எப்படி நாசூக்காக 'நாணய அறிவுடை இளையோன்' என்று குறிப்பிட்டுள்ளார் பார்த்தீர்களா".



(88) "அமைச்சரே, தீபாவளிக்கு புது உடைகள் எடுக்க  வேண்டும். உடனே தேரோட்டியை அழைத்து என்னுடைய தேரினை எடுத்து வரச்  சொல்லுங்கள்".

"மன்னிக்கவும் மன்னா, அரசியார், இளவரசர் மற்றும் இளவரசியார் எல்லாம் தேரோட்டி விபத்து ஏற்படுத்திய வழக்குகளில் இழப்பீடு வழங்காததால் எல்லாத் தேர்களையும் நீதிமன்றத்தில் ஜப்தி செய்து விட்டார்கள்".

(89) "அமைச்சரே தீபாவளி மாமூல் வசூல் இந்தாண்டு மிகவும் குறைந்து விட்டதே என்ன காரணம்"?
"மன்னா அப்போதே எச்சரித்தேன் நம் சந்தைப் பங்கு ஃபண்ட் மானேஜர் சரியில்லை என்று கேட்டீர்களா". 

(90) "தீபாவளிக்கு நான் எதாவது புதுமையாக செய்ய வேண்டாமா அமைச்சரே. நல்ல யோசனை சொல்லுங்கள்".

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நூறு ராக்கெட்கள் நீங்கள் விடப் போவதாக அறிவித்து விடலாம் அரசே"

"அதெல்லாம் முடியுமா, அமைச்சரே"?

"ஏன் முடியாது மன்னா, இங்கே விடும் நூறு ராக்கெட் பட்டாசுகளை அங்கே போய் விட்டு விடலாம்".

No comments:

Post a Comment