Saturday 1 October 2016

மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (3)

(21) "கவனித்தீர்களா அமைச்சரே, ‘ஐந்து ஆண்டுகளில் ஐம்பது அணைகள்’ ஒரு புரட்சிகரமான திட்டம் என்று சக்கரவர்த்தியே பாராட்டிஇருக்கிறார் தெரியுமா"?

"ஆறுகளே இல்லாத இடங்களில் அணைகள் கட்டும் திட்டத்தை வேறு என்ன சொல்ல முடியும், மன்னா"?


(22)"அரசவையில் புதியதாக சியர் கேர்ல்ஸ் நியமிக்கப் போகிறதாக கேள்விப்பட்டோமே மன்னா"

"ஆம். அமைச்சரே. அரசவையை குளிர் பதனம் செய்யப் போவதால் வேலை இழக்கும் சாமரம் வீசும் பெண்களுக்கு மாற்றுப் பணிதர வேண்டாமா, அமைச்சரே"


(23) "மன்னா ஏதோ அவசர ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற வரச் சொல்லியதாக நிதி அமைச்சரை கூட்டி வரச் சொன்னீரகளாமே"

"ஆம், அமைச்சரே. பங்குச் சந்தையில் வரத்தகர்கள் தங்கள் பங்குகளை வியாபாரம் செய்ய மார்கெட் வளாகம் தலைநகரில் கட்டப்படும். பங்குகளை அடுக்கி வைக்கத் தேவையான ரேக்குகளை அரசிடம் மட்டுமே வாங்க வேண்டும்".


(24) "பக்கத்து நாட்டின் அரசர் எனக்கு ஏதோ பட்டம் தர அழைப்பு விட்டுள்ளாரே அமைச்சரே, எவ்வளவு பெருமையாக இருக்கிறது தெரியுமா"

"அது காற்றாடி விடும் உங்கள் திறமையை கேள்விப்பட்டு அவர் பேரக்குழந்தைகளுக்கு காற்றாடி விட்டுக் காட்ட பட்டம் தர அழைப்பு விடுத்துள்ளார், மன்னா".


(25) "அரசே, சுறுசுறுப்பாக மாலை ஆறு மணிக்கே மாறு வேடத்தில் நகர்வலத்திற்கு கிளம்பி விட்டீர்களே".

"நவராத்திரி ஆயிற்றே. எல்லா வீடுகளிலும் கொலு வைத்து சுண்டல் தருவார்களே அமைச்சரே, மறந்து விட்டீர்களா”?





(26) "இளவரசர் சுயமாக தொழில் செய்ய ஆரம்பித்து விட்டாராமே, அரசே, பெருமையாக இருக்கிறது".
"அதுவா.... அரணமனைக் காவலர்களைக் கொண்டு புதுப்பட டிக்கெட்களை வாங்கி பிளாக்கில் விற்று சம்பாதிக்கிறார்".


(27) "மன்னா, பாரிக்கு அடுத்து முல்லைக்கு தேர் கொடுத்த வள்ளலே என்று புகழ்ந்து பாடிய புலவரை நாடு கடத்த உத்தரவிட்டீரகளாமே"?

"ஆம் அமைச்சரே, யாருக்கும் தெரியாமல்  நான் அவளுக்குத் தந்ததை எப்படியோ தெரிந்து கொண்டு அரசியார் முன்னிலையில் சொல்லி குடும்பத்தில் குழப்பம் உண்டு பண்ணி விட்டான் பாவி”



(28) "அரசே, வெளிநாட்டு தூதுவர்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் அரசவைக்கு வரப்போகிறார்கள். நீங்கள் இன்னும் தயாராகவில்லை. பவர்லால் சேட் அடகு கடைக்கு வேறு போகச் சொல்லுகிறீர்கள். என்ன பிரச்சனை மன்னா"?

"இளவரசர் கைச் செலவுக்குப் பணம் இல்லாமல் மணிமகுடத்தை பவர்லால் சேட்டிடம் அடகு வைத்து விட்டார் அமைச்சரே"


(29) "அண்டை நாட்டு இளவரசியை பெண் கேட்டுப் போகலாம் என்றால் அப் பெண் மீது நம் இளவரசர் மிகுந்த கோபத்தில் இருக்கிறாரே ஏன்அரசே? என்ன காரணம்"?

அதுவா, சென்ற முறை வேட்டையாடச் சென்ற போது நாய் துரத்தவே தலைதெறிக்க ஓடி வந்தாரல்லவா. அப்போது ஆலயமணி படத்தில் வரும் 'கண்ணான கண்ணனுக்கு அவசரமா? கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலியா' என்ற பாட்டுப் பாடி வெறுப்பேற்றினாளாம், அமைச்சரே"


(30) "என்னது, காவிரி பிரச்சனையில் நம் மக்கள் என் மீது அதிருப்தியாக உள்ளார்களா? இப்போது என்ன செய்ய அமைச்சரே"

"காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவியுங்கள் மன்னா. காலை பத்து மணிக்கு ஆரம்பியுங்கள். மாலை நான்கு மணிக்குள் எதாவது ஒரு குறுநில மன்னரை செட் அப் செய்து, வேண்டுகோள் விட வைத்து வழக்கம் போல் பிரியாணி சாப்பிட்டு முடித்துக் கொண்டு விடலாம்".

No comments:

Post a Comment