Friday 18 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (10)

(91)
"அண்ணே, ஒரு சந்தேகம்ணே"
"சீக்கிரம் கேட்டுத் தொலைடா"
"ஒரு நாட்டில கடன் வாங்கிட்டு திருப்பிக் கட்டாமல் வேற நாட்டுக்கு ஓடிப் போயிட்டா அவிங்க கடனை வராக் கடனா தள்ளுபடி பண்ணிடறாய்ங்க. உலக வங்கியில் கடன் வாங்கிட்டு கட்டாமல் எங்கேண்ணே போகணும்"?



(92)
"அந்த ஆளுக்கு அடிக்கடி நிறைய கடன் கொடுத்தீங்க . இப்ப வாங்கிய கடனை கட்டாமல் ஓடிப் போயிட்டான். இப்படி கடன் வாங்கும் போது செக்யூரிட்டி பார்த்தீர்களா"?
"ஆமாம் சார். ஒவ்வொரு தடவை கடன் வாங்க வரும் போதும் அவரு கூட யூனிபார்ம் போட்ட 10 செக்யூரிட்டிகளை கூட்டிக்கிட்டு வருவார், நாங்க பார்த்திருக்கோம் சார்".



(93)
"அண்ணே, கல்யாணத்திற்கு இரண்டரை இலட்சம் பணம் தராங்களாம்".
"அதுக்கென்னடா இப்போ?
"ஒரே நேரத்தில் ஒரே மேடையில் நம்ம கட்சித் தொண்டர்கள் 1000 ஜோடிகளுக்கு நீங்க தலைமை தாங்கி மெகா திருமணம் பண்ணி வச்சு ரொம்ப நாளாச்சே, அதான் நெனப்பூட்னேன்ணே".



(94)
"அடுத்த சென்மத்தில நாம எல்லாம் பாக்டீரியா, வைரஸ் இப்படித்தான் பொறக்கப் போறோம்ணே".
"அதெப்படிடா பெரிய தீர்க்கதரிசியாட்டும் சொல்லற"?
"அதுன்ணே ஒருத்தருட்ட கடன்பட்டா இல்லாட்டா கடன் கொடுத்து ஏமாந்தா அடுத்த பிறவியில பிள்ளையா பொறந்து கடன கழிக்கணுமின்னு கேள்விப்பட்டேண்ணே. 63 பேருக்கு இத்தனை கோடி ஜனங்க பிள்ளையா பொறக்க இது தவிர வேற வழியில்லையேண்ணே".



(95)
"என்னப்பா உங்க வீட்டு கிட்ட இரவில் திருட்டு நடக்குது பயமாக இருக்கும் என்று சொன்னாயே. இப்ப எப்படி இருக்கு"?
"போன மாசம் ஒரு ATM திறந்தாங்க இப்போ 10 நாளா இரவும், பகலும் 24 மணி நேரமும் எப்படியும் 50 பேர் நிற்கிறாப்டி, பயமே இல்லை".








(96)
"ஏணுங்க அந்த ATM ல் பணமே வரவில்லையே. அப்புறம் எதுக்கு அதுகிட்ட ஒருத்தரு ATM அப்படின்னு போர்ட் போட்டுக்கிட்டு உட்கார்ந்து இருக்காரு"?
அவரு 'ஆறுதல் டெல்லிங் மேன்'னாம். பணம் எடுக்க வரவங்களுக்கு ஆறுதலா தோளில் தட்டிக் கொடுத்து அனுப்புவாராம்".



(97)
" ஏணுங்க அந்த பேங்க்கில் ஒரு கவுண்டரில் கிளார்க்கும் இன்னொரு கவுண்டரில் ஒரு வஸ்தாத் பயில்வானும் உட்கார்ந்து இருக்காங்களே ஏன்"?
"கிளாரக் 'வாடிக்கையாளர் சேவை'க்கும், பயில்வான் பிரச்சனை பண்ணும் 'அடாவடிக்கையாளர் சேவை'க்கும் அப்படின்னு பிரிச்சிட்டாங்களாம்"



(98)
"வாடிக்கையாளர் சேவை மையத்தில் 500 ரூபாய் பணம் மாற்றப் போன என்னை நல்லா ஏமாத்திட்டாய்ங்க அண்ணே".
"என்னடா உன்னையா ஏமாத்திட்டாய்ங்க? எப்படி டா".
"உள்ளே போனா விதவிதமா இடியாப்பம் சேவை விற்பனையாம்.லெமன் சேவை மாதிரி 20 வகை சேவை 500 ரூபாய் ன்னு பாரசல் பண்ணி தலையில கட்டிட்டாய்ஙகண்ணே ".



(99)
"அண்ணே கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வர சூப்பர் ஐடியா எல்லாம் வைச்சிருந்தேன். ஆனா யாரும் என்னை மதிக்கலை. இப்ப கஷ்டப்படறாங்க".
"இவரு பெரிய பொருளாதார வல்லுநர், பிளான் சொல்லப் போறாரு. சரி சொல்லு"
"அது ஒன்னும் இல்லண்ணே. 50000 ரூபாய் நோட்டுங்க அடிச்சி எவ்வளவு வேண்டுமின்னாலும் 500,1000 ரூ நோட்டு கொடுத்து மாற்றிக்கலாம் என்று சொல்லி இருந்தா, சைலன்டா மாற்ற வர ஆளுங்க மாத்தின பின்னால் 2 மாதம் கழித்து அந்த 50000 ரூபாய் நோட்டெல்லாம் செல்லாதுன்னு சொல்லிட்டிருக்கலாம்ணே".


(100)
"அண்ணே நாளைக்கு மூத்த குடிமக்கள் மட்டுமே பணம் மாற்ற முடியுமாம்.
"அதுக்கு இப்ப என்னடா. அத்த எதுக்கு என்கிட்ட சொல்ற"?
"நாளைக்கு பணம் மாத்த கொள்ள நம்ம கட்சியின் 
இளைஞர் அணிச் செயலாளர்களா பொறுப்பில்  இருக்கிற வட்ட, நகர, பேரூர், ஒன்றிய, மாவட்ட, மாநில   பெரிசுங்க யாரும் கண்டிப்பாக பேங்க் பக்கம் போகாம இருக்கிறது மாதிரி பாத்துக்கிடுங்க".
Like
Comment


2 comments:

  1. இரண்டாவது மிகவும் அருமை நண்பரே

    http://killergee.blogspot.ae/2016/11/blog-post_18.html

    ReplyDelete
  2. நன்றி சார். என்னைத் பொருத்தவரை 100 வதுதான் மிகவும் பிடித்து.

    ReplyDelete