Tuesday 6 September 2016

இலையும், காற்றும்.

1) உணவு சமைத்து
ஆசை ஆசையாக
ஊட்டி  மரங்களை
வளர்த்தன இலைகள்.
காற்று தழுவிய மயக்கத்தில்
தன்நிலை மறந்த மரம்
உதிர்த்தது இலைகளை.

2) காற்று வந்து ஆன் யுவர் மார்ட்
கெட் செட் ரெடி கோ சொல்லக்
காத்திருந்தன உதிரத் தயாராக
இருந்த பழுத்த இலைகள்.

3) தாம் இறந்து போனது தெரியாமல்  மரத்திலிருந்து குதித்து விளையாடிக்  பழுத்த இலைகளுக்காக
கண்ணீர் வடித்தது மேகம்.

4) மழையில் குளித்து
குளிரில் நடுங்கிய மரங்கள்
தலையை காற்றில் உதறி உதறி
உலர்த்திக் கொண்டன.

5) குளக்கரையில் அரச மரத்தின் கீழே
அமர்ந்திருந்த ஆனை முகனுக்கு
இலைகளை உதிர்த்து
அர்ச்சித்ததுப் போனது
மெல்லிய தென்றல் காற்று.

No comments:

Post a Comment