Wednesday 31 August 2016

பலசரக்கு - (3)

(1) நீரில் உருவான காற்றுக் குமிழ் 
உடைந்த போது
பிரிக்கப்பட்டிருந்த காற்று, காற்றையும்
நீர், நீரையும் கலந்தன.
குமிழ் என்ற மாயை மறைந்தது.

(2) பறவைகளுக்கும், தேசாந்திரிக்கும்
கை காட்டி மரங்கள் தேவைப்படுவதில்லை.


(3) தரதரவென கோபத்துடன்
அழைத்துச் செல்லும் 
தகப்பனாக காற்றும், 
பள்ளி செல்ல மறுத்து 
அடம் பிடித்து அழும் 
சிறுபிள்ளையாக
மழை மேகமும்.

(4) வருணன் சாம்பல் மேக டிஸ்டெம்பர் 
நீல வானில் வர்ணம் பூசிய
போது பூவியில் சொட்டிய 
துளிகளாக சாரல் மழை.

(5) அன்பை எல்லோரிடமிருந்தும் எவ்வளவு 
சிறிய அளவினதானாலும் மகிழ்வுடன் 
பெற்றுக் கொள்ளுங்கள்.
அதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்குங்கள்.


No comments:

Post a Comment