Sunday 5 November 2017

முகநூல் கிறுக்கல்கள் (7)

1) இப்போதைய  கடவுளிடம் மனு கொடுத்து  முறை வர ஒரு பிறவி காத்திருக்க
முறை வந்த போது கடவுள் மாறியிருந்தார்.

2) கடவுளுடன் செல்ஃபி எடுக்கையில்
பின்னோக்கி நகர்ந்து வீழ்ந்ததில்
பூமியில் புதுப் பிறவி.

3) பால் வேறுபாடில்லை வேலைக்குச் சேர்ந்த அனைவருக்கும் மாங்கல்யம்
ஆளறி ஆவண அட்டை.

4) பூனை கண்ணை முடியது
உலகம் இருண்டு விட்டது
செல்பேசியில் மின்னூட்டமில்லை.

5) சுவர் ஓரம் எறும்புப் புற்று
நினைவில் வந்தது சிறுவனாக
கடற்கரை மணலில் கட்டிய கோபுரம்.

6) காற்றுக்குத் தலை சீவ
நீள நீளமாய்  எத்தனை சீப்புகள்
தென்னங்கீற்று.

7) வெட்ட வெட்ட பொறுத்திருந்த பூமி
ஒரு கட்டத்தில் வலியில்
பொங்கி அழுதது , ஊற்று.

8) கேட்டவர்களுக்கு எல்லாம்
சீட்டுக் கிழிந்து கொண்டிருந்து
பேருந்து நடத்துனர்.

9) ஏறி விளையாடி வாலாட்டி விசுவாசம் , குப்பைதொட்டியில் யாரோ வீசிய
ஊசிய பிரியாணி, தெரு நாய்.

10) நாடகத்தில் காட்சி மாற்றமா?
உடை மாற்றப் போகிறார்களா?
எதற்கு வானில் கருமேகத் திரை?

No comments:

Post a Comment