Tuesday 21 November 2017

முகநூல் கிறுக்கல்கள் (9)

1) காலி நாற்காலிகளின்
மௌன மகாநாடு
திருமணம் முடிந்த அரங்கம்.

2) நின்று கொண்டிருந்த
வெளியில் ஓடிப்போய்
ஏறிக் கொண்டது விமானம்.

3) ரகசியம் சொல்லிக்
காதை கடித்துக்கொண்டு
இருக்கிறது ஃப்ளூடூத்.

4) கருப்பான பெண்ணை
பிடிக்காதவனின் வெளுத்த
கேசத்திற்கு கருஞ் சாயம்.

5) சேற்றில்  சென்றும்
தடம் பதிக்கிறது
தானியங்கி சக்கரம்.

6) வயலில் அணி வகுத்து
வரிசையில் நாற்றுகள்
வான் மழைக்குப் பிரார்த்தனை.

7)  வரப்பில் உறங்குது
நாற்றுக் கட்டுகள்
பறிக்கப்பட்டு வந்த களைப்போ?

8) இறுக்கிய கட்டில் நாற்றுகள்
கட்டுப் பிரித்ததும் காலூன்றின
புது நிலத்தில்

9) நில மகள் விரும்பும்
பச்சைவண்ண ஆடை நெசவு
நாற்று நடுதல்.

10) அணிவகுத்த பச்சை வண்ணப்
படைகள் பசிப்பிணி போக்க
தயாராகுது நாற்றங்கால்.

11) கண் நிறைந்த பசுமை
 ஆகும் நான்கு திங்களில்
வயிறு நிறைக்கும் சோறு.

12) நாற்றென்னை உயிர்க்க
நீ குனிந்தாய் நான் குனிவேன்
நீ உயிர்க்க நெல்லாய்.

13) கைகளில் பிடித்த உயிர் கட்டு
நாற்று பயிரானால் வருமே
கைகொள்ளாமல் பணக்கட்டு.

14) தூவிய வித்து ஆனது நாத்து
நடுகையில் கலங்குது
மண்ணோடும் நதி பார்த்து.

15) விவசாயி கால்பட்ட
புனித நீரை அள்ளிப்
பருகும்  கதிரவன்.

No comments:

Post a Comment