Monday 13 June 2016

மனசாட்சி

பத்மாசனமிட்டு,புறக்கண் மூடி என்னை அறிய முற்பட்டேன்.

அகக்கண் திறந்து காட்சி மலர்ந்தது.


அழுக்கான, நாற்றமடிக்கும், பாசி படர்ந்த குளம், அதனருகே நான்.


குளத்தை நெருங்க முடியாத அளவுக்கு அதில் நரகல், குப்பைகூளங்கள்,உடைந்த ,உடையாத மதுக் குப்பிகள், சிகரெட்,பீடித துண்டுகள் சுற்றிலும் சிறுநீர் தேங்கி மயக்கம் வரவழைத்தது.







அப்போதுதான் கவனித்தேன், அவனை.


யார் நீ என வினவினேன்.


குளத்தின் காவலன் என்றவனை கோபத்துடன் ,


 "நீ காவல் இருந்துமா இது இவ்வளவு மோசமான நிலையில் உள்ளது" என்றேன்.


அவன் சிரித்தபடி,

"இப்பெல்லாம் யாரும் என்னை மதிப்பதோ, என் சொல் கேட்கவோ விரும்புவதில்லை" எனறான்.


என் தேடுதல் விவரம் சொன்னதும், அவன்,


 "குளத்தில் இறங்கி மூழகித்தேடு" என்றான்.

 
"இதிலா? என்னால் முடியாது. குளம் சுத்தமாயிருந்தால் முடியும்" என்றேன்.


அதற்கவன், "சரி, நீங்களே இறங்கி சுத்தம் செய்யுங்கள்",எனறதும் சினம் தலைக்கேற,


" நீ செய்ய வேண்டிய வேலையை என்னைச் செய்யச் சொல்ல நீ யாரடா" என்றேன்.
அவன் மிக அமைதியாக முறுவலித்தபடி

 
" நானா, உன் மனசாட்சி" என்றான்.


"அப்போ இந்தக் குளம்" எனறேன்.


'அதுதான் உன் மனம்' எனறான்.

No comments:

Post a Comment