Tuesday 31 October 2017

முகநூல் கிறுக்கல்கள் (6)

1) இருட்டறையில் நடனம்
மௌனத்தின் நட்டுவாங்கம்
மெழுகுவர்த்தியின் சுடர்.

2) பள்ளிக் குழந்தையாக
கதவு திறக்கக் காத்திருந்தது
அறையில் அடைபட்ட இருட்டு.

3) நல்வரவு என்ற மிதியடி
அழுத்திக் கால் அழுக்கை
தேய்த்த விருந்தாளி.

4) சோதிடனின் தேடல்
பார்ப்பவனின்  கைரேகையில்
தன் பேரழுதிய அரிசியை.

5) கதிரவன் அணிந்த
குளிர் கண்ணாடி
கார்கால மேகம்.

6) முரண்டு பிடிக்கும் பிள்ளையாக
அழும் வானத்து மழையை
அதட்டி அடக்க முயலும் இடி.

7)எரி பொருள் சிக்கனம் விழிப்புணர்வு ஓட்டம் தொடங்கிய நினைவிடத்தில் அலங்கார அணையாத எரிவாயுத் தீபம்.

8) மலர் தூவிச் சென்ற ஊர்வலப் பாதையில்
யார்யாரோ நடக்கிறார்கள்
ஊர்வல நாயகன் தவிர, இறுதி ஊர்வலம்.

9) பட்டினியாய் எலி
அடுப்பில் உறங்கும் பூனை
சமையலறையில் எலிப் பொந்து.

10) தனி வீட்டில் இருக்க வாய்ப்பிருந்தும் 
பல வீடுகளில் ஒண்டுக் குடுத்தனம் அநேக ஜாதகங்களில் நவகோள்கள்.


4 comments: