Sunday 22 May 2016

5 மூன்று வரிக் கவிதைகள்.

1) நல்லது, கெட்டது என்று கண்டது எல்லாவற்றையும் பறந்து பறந்து கொத்தித் தின்றபடி இருந்தது மனக் காக்கை.



2) விலங்காகச் சீற்றத்துடன் அலைந்து உடலாலும், மனதாலும் வேட்டையாடிக் கொன்று தின்றவற்றின் எச்சங்களின் அழுகல் நாற்றமும் உறுத்தும் நினைவாய் எலும்புகளும் நாசியை நிறைத்திருக்கும் மரணத்தின் வாசனை

3) மனதில் விதைக்கப்பட்ட வாழ்வின் நிகழ்வுகள் உறங்கிக் கிடக்க,
ஏதோ ஏமாற்றத்தில் கண்ணீர் மழையில் காலம் அனுபவ மண்வெட்டியால் தாறுமாறாய் வெட்டிய வரண்ட ஓடைகளில் உப்பு தண்ணீர் ஓடியதில் கருப்பும் வெளுப்புமாய் முகத் தோட்டத்தில் முளைக்க ஆரம்பிக்க புன்னகைப் பூ மலர்வது நின்று போனது.




4) பிறந்த போது கையில் கட்டியிருந்த அடையாளச்சீட்டு,
ஓடிக் கொண்டிருந்த மூச்சுக் காற்று நின்று போன பின், ஆறுக்கு நான்கு குளிர் பெட்டியில் கால் கட்டை விரலுக்கு மாறிப் போனது
வாழ்ந்த வாழ்வுக்கு ஆதார் அட்டையா அல்லது விலைச் சீட்டா என்று புரியவில்லை.

No comments:

Post a Comment