Sunday 22 May 2016

எரிந்து போன நினைவுகள்

அடர்ந்த மூங்கில் காடு ஊடாக வீசும் வெப்பக் காற்றாக என் மனத்தில் உன் நினைவுகள்.

உரச உரசப் பற்றி எரிந்தது மனம்.

எரிந்து வெந்தடங்கிய காட்டில் தப்பித்த உயிர்களின் மரண ஓலமும், கூச்சலுமாய் கலவரமானது.

நெருப்புக்குக் காரணம் மூங்கிலா காற்றா?

இரண்டுமே இல்லையா?

அல்லது இரண்டுமேதானா?

புரியவில்லை.

எரிந்து சாம்பலான அத்தனையும் துளிர்க்க உயிர்க்க வழியில்லை.

காற்று எப்போதும் உயிர்த்தே இருப்பது இயற்கையின் நியதி.

மேகத்தைக் குளிர்வித்து பொழியும் மழையாக நீறுபூத்த நெஞ்சத்து நெருப்பை அணைக்க வருவாயா? இல்லை,

மேகங்களின் பளபளக்கும் கத்திச் சண்டை மின்னல்களையும், இடிக்குரல் முழக்கங்களையும் ரசித்தபடி என் நிலை மறந்து கடந்து செல்வாயோ?

எப்படி என்றாலும் உன் நெற்றியில் எரிந்த என் மனச் சாம்பல் பூசு.

முடிந்தால் சாம்பலை அள்ளிச் சென்று கங்கையில் மழை பொழிந்து கரைத்து விடு.

அதுவே நீ தரும் பரிசென அமைதியடையும் என் ஆன்மா.



No comments:

Post a Comment