Wednesday 25 May 2016

தனி ஊசல்

அவனுக்கு ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி ஊசல்.

ஒவ்வொருவரும் வெவ்வேறு நீளம்.

அனுபவித்து வாழ நினைத்தால் அதிக நீளம்

அவசரமாக வாழ குறைந்த நீளம்.



அலையும் காலமோ நீளத்திற்கும், மண்ணின் ஈர்ப்புக்கும்
ஆடுவதும் ஆடிஅடங்குவதும் நீளம் சார்ந்து அப்படியே.

இறப்புக்கும் பிறப்புக்கும் இடையே ஆடும்  இந்த ஆட்டம்
இறுதியில் ஒரு நாள் மெல்ல மெல்ல நின்று போகும்.

அடுத்து அலைக்கும் வரையில் பிறப்புக்கும் இறப்புக்கும்
நடுவே அமைதி கொள்கிறது ஆன்மா சிலகாலம்,
அலைத்து விட்டு காலம் ஓட விட்டு எண்ணிக்கை ஆரம்பமாயிற்று.

சுழி, ஒன்று, இரண்டு............. என வருடங்களில் வாழ்வின்
அலைவுகளை எண்ண ஆரம்பித்தவன் திறமை சாலி தான்.

எப்படி ஒற்றை ஆளாக இத்தனை ஊசல்களில் அளவெடுக்கிறான்.
வியந்து போனேன் அந்த இறைவனை எண்ணி.


No comments:

Post a Comment