Tuesday 31 May 2016

தனித்திருந்தது நிலாப்பெண்

கண்ணடித்தன விண்மீன்கள்

அவற்றைப் போய் நல்லா நாலு வார்த்தை கேட்கலாமென்றால்,

இந்த பூமி இழுத்துக் கொண்டு கூடவே
 பீச், மால், கொடைக்கானல் என்று சுற்ற வைக்கிறான்.



சரி, இவனை காதலித்துத் தொலைப்போம் என்றால்
யாரோ ஆம்ஸ்டிராங்காம், அவனை விட்டு என்னை வேவு வேறு பார்க்கிறான்.

நம்பிக்கை கெட்ட ஜென்மம்.
மனிசப்பய வாழற இடத்துக் காரன் அவனை மாதிரித்தானே இருப்பான்.

சூரியன் வேற தினம் தினம் வந்து மேக்கப் போட்டு அழகாக்கி விட்டு மனதைக் கரைக்கிறான். 

காதலிக்கவில்லையானால் ஒளிதரமாட்டேன் என்று குறுக்கே வந்து பிரச்சனை பண்ணுகிறான்.

மாதாமாதம் இவனுங்களுக்குப் பயந்து ஒளிகிறதும், காணாமல் போவதும், திரும்ப வருவதுமாயிற்று என் வாழ்க்கை.

பெரும் குழப்பம் யாரைத்தேர்ந்தெடுப்பதென்று.

வழி தெரியாமல் பாழும் கிணற்று நீரில் நீந்தியபடி சிந்திக்கிறேன்.
யாராவது கூட துணைக்கு இருங்களேன். பிளீஸ்

No comments:

Post a Comment