Tuesday 25 October 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (1)

(1) "அண்ணே தலைவர் என்னதான் உங்க பால்ய நண்பர் என்றாலும் நீங்க பொதுக்குழுவில் அவரை அப்படி 'சித்தப்பு' என்று கூப்பிடறதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்"


(2) "அண்ணே, தலைவர் உங்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீங்கி விட்டாரே, இனி என்ன செய்ய உத்தேசம்"?
"ஹூம். கடவுள் இருக்காண்டா குமாரு.  நாட்டுக் கட்சியில ஆல்டோ தரதா சொல்லி தூது விட்டிருக்காய்ங்க"



(3) "என்னதான் பல்வலி அதிகமா இருந்தாலும் உள்ளூரில டாக்டரை பாருங்கண்னு சொன்னோம்.  அத்தெ கேட்காத டெல்லி யில போய் வைத்தியம் பாரத்தீங்க, இப்ப பாருங்க டெல்லிக்குப் போன அண்ணன் பல்லைப் புடுங்கிட்டாய்ங்க ன்னு எதிர் கோஷ்டி சொல்லிட்டுத் திரியுது அண்ணே”



(4) "என்னப்பா, நம்ம வூட்டு மின்ன ஒரே ரௌடிகளா நிற்கிறாய்ங்க, என்ன விசயம்"?
"இந்த காளிப்பயல முளைப்பாரிக்கு அண்ணன்  ஆள் எடுக்கிறாருன்னு டவுணுக்குப் போய் ஆள் கூட்டி வரச் சொன்னீக. அந்த பொச கெட்ட பய அண்ணன் மொள்ளமாறிக்கு ஆள் எடுக்கிறாய்ங்கன்னு டவுணுல போய்    தப்பா சொல்லியிருக்கான் அண்ணே"



(5) "அண்ணே, அந்த கேரளா பார்ட்டி ரொம்ப குசும்பு புடிச்சவன்".
"அப்படியா என்ன சொன்னான் அவன்"?
பாலாற்று மண்  பத்து லோடு வேணும் என்று கேட்கலமில்ல, அத்தெ விட்டு திராவிட மண்ணு பத்து லோடு அனுப்பச் சொல்லுன்னு நக்கலா பேசறான்ணே".







(6) "ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு ஆயிரம் தொண்டர்களை கட்சி மாத்தினதுக்கு என்ன கிடைச்சுது அண்ணே"?
"அந்த வயித்தெரிச்சல ஏன் கேட்கிற. 2% கமிஷனா இருபது தொண்டர்களை நம்ம கட்சிக்கு வைச்சிக்கச் சொல்லிட்டாங்க".



(7) "அந்த கட்சியில புதுசா நேர்முகத் தேர்வு வைச்சதில் உங்கள எப்படின்ணே எடுத்த எடுப்பில தலைமைக் கழக பேச்சாளராக்கினாங்க"?
 ஸ்லோகன் சொல்லச் சொல்லிக் கேட்டாங்க. எல்லாரும் ' தூக்குமேடை பஞ்சு மெத்தை' அப்படில்லாம் சொன்னாங்க. நான் 'கரண்டுக் கம்பியும் கட்டிக்கரும்பு, தண்டவாளமும் தலையணை' என்று சொன்னேன்.தலைவர் ஒடனே ஓகே சொல்லிட்டாரு".



(8) "என்னண்ணே கடல் தண்ணி, கூவம் தண்ணி எல்லாம் 10 மில்லி சாஷே, ஆஸ்பத்திரி கழிவுகள் 10 கிராம் பாக்கெட் போட  பேங்க் லோன் அப்ளிகேஷன் சேங்ஷன் ஆயிடுச்சா"?
"ஆமாடா, இப்போ அரசியல் தலைவர்களுக்கு போராட்டம் பண்ணறவய்ங்க இதையெல்லாம் தபாலில் அனுப்புறாய்ங்க. அதான் மேனஜரை கேட்டேன். புதிய வியாபார உத்தி ன்னு உடனே சாங்ஷன் பண்ணிட்டாரு".



(9) "இந்த புலனாய்வு பத்திரிக்கை ஆளை ஏன்ணே பகைச்சிக்கிட்டீங்க"?
"என்னடா என்ன ஆச்சு"?
"போன வாரம் போத்தீஸில் இரண்டு புடவை எடுத்து ஒன்னை அண்ணிக்கும்,இன்னொன்னை மாரியம்மன் கோவிலுக்கும் கொடுத்தீங்களா.
கிரித்திரியம் புடிச்சவன்  அதை  ஒரு புடவை மனைவிக்கும் மற்றதை மாரியம்மாக்கும் கொடுத்தா எழுதிப்போட்டான். அண்ணி செமகாண்டுல இருக்காங்கண்ணே".



10) "அண்ணே முன்ன நாம ஓட்டுக்கு காசு கொடுத்ததை நினைவுபடுத்தி  எலக்சன் போஸ்டரில் என்ன வாக்கியம் போடலாமின்னு கேட்டீங்களே. அதுக்கு ஸ்லோகன் தயாரா இருக்கண்ணே".

"அப்படியா, சொல்லு பார்ப்போம்".

"அன்றே  ஆயிரமாயிரமாய் கொடுத்துச் சிவந்த கரத்தை இன்று ஐந்தாண்டுகள் மேசை தட்டிச் சிவக்க, நம் டுபாக்கூரார்  அண்ணன் அவர்களுக்கே  வாய்ப்பளியுங்கள்"


2 comments:

  1. அனைத்தும் சந்தர்ப்பவாத நகைச்சுவை இரசித்தேன் நண்பரே
    - கில்லர்ஜி

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி. நன்றி சார்

    ReplyDelete